ETV Bharat / state

விருதுநகர் பட்டாசு ஆலையில் தொடர் வெடி விபத்து: நான்கு பேர் படுகாயம்

author img

By

Published : Apr 15, 2021, 7:46 PM IST

விருதுநகர்: சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் இன்று (ஏப். 15) ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் மூன்று பெண்கள் உள்பட நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

சில நாள்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலர் உயிரிழந்த நிலையில், இன்று (ஏப். 15) மற்றொரு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின், அனுமதிபெற்று இயங்கும் இந்த ஆலையில், இன்று (ஏப். 15) வழக்கம்போல் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டியைச் சேர்ந்த தேசிங்குராஜ் என்பவருக்கு சொந்தமான இந்தப் பட்டாசு ஆலை, வச்சக்காரப்பட்டி அருகே உள்ள சதானந்தபுரத்தில் இயங்கி வருகிறது.

மருந்துகள் உராய்வால் வெடி விபத்து

அப்போது, ஒரு அறையில் பட்டாசுகளுக்கு மருந்துகள் செலுத்தும்போது, உராய்வு காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தால், அந்த அறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆனையூரைச் சேர்ந்த ஆதிலட்சுமி (25) என்ற பெண் படுகாயமடைந்தார்.

மேலும், ஆனையூரைச் சேர்ந்த செந்தி (35), முத்துமாரி (37), அய்யம்பட்டியைச் சேர்ந்த சுந்தரபாண்டி (40) ஆகியோருக்கு 70 விழுக்காடு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

சிகிச்சை

இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி, விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், காயமடைந்த நான்கு பேரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'நாளை நீலகிரி, கோவை, சேலத்தில் இடி மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்பு'

சில நாள்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலர் உயிரிழந்த நிலையில், இன்று (ஏப். 15) மற்றொரு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின், அனுமதிபெற்று இயங்கும் இந்த ஆலையில், இன்று (ஏப். 15) வழக்கம்போல் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டியைச் சேர்ந்த தேசிங்குராஜ் என்பவருக்கு சொந்தமான இந்தப் பட்டாசு ஆலை, வச்சக்காரப்பட்டி அருகே உள்ள சதானந்தபுரத்தில் இயங்கி வருகிறது.

மருந்துகள் உராய்வால் வெடி விபத்து

அப்போது, ஒரு அறையில் பட்டாசுகளுக்கு மருந்துகள் செலுத்தும்போது, உராய்வு காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தால், அந்த அறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆனையூரைச் சேர்ந்த ஆதிலட்சுமி (25) என்ற பெண் படுகாயமடைந்தார்.

மேலும், ஆனையூரைச் சேர்ந்த செந்தி (35), முத்துமாரி (37), அய்யம்பட்டியைச் சேர்ந்த சுந்தரபாண்டி (40) ஆகியோருக்கு 70 விழுக்காடு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.

சிகிச்சை

இந்நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி, விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், காயமடைந்த நான்கு பேரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'நாளை நீலகிரி, கோவை, சேலத்தில் இடி மின்னலுடன் கன மழை பெய்ய வாய்ப்பு'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.